Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

உனக்குள் நான்

உனக்குள் நான்,Unakkul Naan
  • உனக்குள் நான்
  • ..
  • ..
  • இயக்குனர்: ..
30 ஏப், 2016 - 18:03 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » உனக்குள் நான்

இன்டிபென்டன்ட் பியூச்சர் பிலிம் எனும் வகையில் உலகம் முழுவதும் (இந்தியாவில் அல்ல ....) ஏபி இன்டர்நேஷனல் பட நிறுவனம் வாயிலாக இந்த வாரம் ரிலீஸ் ஆகியிருக்கும் தமிழ் திரைப்படம் தான் உனக்குள் நான் .


ஸ்டுடியோ - 18 எனும் பேனரில் வெங்கடேஷ் குமார்.ஜி, கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கி தயாரித்தும் இருக்கும் இப்படத்தின் கதைப்படி .,பரபரப்பான சென்னையின் பழைய மாடல் திரையரங்கு ஒன்றில் ஆப்ரேட்டராக வேலை பார்க்கும் முப்பது வயதுடைய இளைஞரின் பிஞ்சு மகன், பாலர்பள்ளி வகுப்பு முடிந்து அடிக்கடி அந்த தியேட்டருக்கு வந்து தான் ஸ்கூலில் கற்றுக் கொண்ட பாரதியார் பாடல்களையும் தியேட்டரில் தன் ஆப்ரேட்டர் அப்பா அடிக்கடி ஓட்டிப்பார்க்கும் வெவ்வேறு விதமான குறும், பெரும் படங்களையும் ஒப்பிட்டு தன் மனத்திரையில் ஓட்டி பார்க்கிறான், பாரக்கிறான்... படம் பார்க்கும் நாமும் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் ... சுமார் ,1 மணி நேரம் 20 பது நிமிட உனக்குள் நான் படத்திற்குள்ஏகப்பட்ட படங்கள் ஓரேயடியாய் ஓடிக்கொண்டே இருக்கிறது .. அடி ஆத்தீ....என்ன கரு ? என்னகதை ? என்ன களம் ..? நாம் காண்பதும் படத்தில் அந்த பாலகன் காண்பதும் கனவா ?நிஜமா .?என நாம் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஒரு வழியாய் "உனக்குள் நான் " திரைப்படமும் ,அத்திரைப் படத்திற்குள் எண்ணற்ற படங்கள், பாடங்களும் முடிவடைகிறது .அப்பாடி !


இளம் பிஞ்சு பள்ளி பாலகனாக லீட்ரோலில் மாஸ்டர் சஞ்சித் இயல்பாக இருக்கிறார், உட்காருகிறார் ஓடுகிறார் ., வருகிறார் , போகிறார்... தியேட்டர் ஆப்ரேட்டர் அப்பாவை பார்க்கப் போகும் நாளில் நிறைய படம் பார்க்கிறார். ஓகே!


மாஸ்டர் சஞ்சித்துடன் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட்டாக கார்த்திக் நாகராஜன் , அப்பா ராவ் , பக்கிரிசாமி உள்ளிட்டோரும் வந்து போகின்றனர். நாம் பொறுமையிழந்து நொந்து போகிறோம் !


ராகுல்ராஜ் குமாரின் வித்தியாசமான ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய ப்ளஸ். சுரேந்தர் சி யின் படத்தொகுப்பு படுத்தல் ...


டோனி பிரிட்டோவின் இசையில் விவேக் வேல்முருகன் எழுத்தில் சந்தோஷ் நாராயணன் பாடிய அதிரும் நதியில்...." பாடலும் ,மல்லிகா .ஜி எழுத்தில் செளமியா ராமநாராயணன் பாடிய என் உயிரே ... பாடலும் சற்றே ஆறுதல்!


வெங்கடேஷ் குமார் .ஜி ., தனது எழுத்து , இயக்கம் , தயாரிப்பில் ... என்னென்னமோ சொல்ல வந்திருக்கிறார். .. ரசிகர்கள் என்னமோ புரிந்து கொள்வார்கள். அவர் விரும்பிய வெளிநாட்டு வாழ் தமிழர்கள் , சினிமா ரசிகர்களாவது அவர் சொல்ல வந்ததை புரிந்து கொண்டால் சரி! புரிந்து கொள்வார்களா?பொறுத்திருந்து பார்ப்போம்!


ஆக மொத்தத்தில் , உனக்குள் நான் - வெளிநாட்டில் தான் ... என்பதால் , தப்பித்தான் லோக்கல் ரசிகன்!"



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in