தினமலர் விமர்சனம்
நிகிஷா பட்டேல் , சிம்ரன், இனியா ... என மூன்று கதாநாயகியர், கதையின்நாயகியராக நடிக்க., வசிஸ்டா சிம்ஹா எனும் தமிழுக்கு புதியவர் வில்லனிக் ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் கிளாமர் திரில்லர் படம் தான் கரையோரம் .
புதியவர்ஜெ கே எஸ் எனும் ஜெகதீஷ் குமார் இயக்கத்தில் ஆங்கிலவருட பிறப்பன்று அகிலமெங்கும் திரைக்கு வந்துள்ள "கரையோரம் ரசிகர்களின் நெஞ்சோரம் நீங்காமல் ... நிறைந்திருக்குமா ? பார்ப்போம் ...
கதை ப்படி .,பெரும் செல்வந்தரான ராதாரவியின் மூத்த மகள் நிகிஷா பட்டேல் ...
அப்பாவின் அதீத நம்பிக்கைக்கு பாத்திரமான நிகிஷா., தந்தையின் சொல்லை மீறி ..தன் தங்கைக்கும் ,அவளது ஆசை காதலனுக்கும் அப்பா ஊரில் இல்லாத சமயம் திருமணம் செய்து வைக்கிறார். இந்த தகவல் தெரிந்ததும் அப்பா ராதாரவி அதிர்ச்சியில் மரணமடைய ., நிகிஷாவின் நிலை பரிதாபத்திற்குரியதாகிறது.
நிகிஷாவின் ஆசை தங்கையும் , தங்கையின் செல்ல மகளும் கூட ., அடுத்தடுத்து இறந்து போக , மனக்கலக்கத்திற்கும் , புழுக்கத்திற்கும் ,உள்ளாகும் நிகிஷா ., ஆறுதல் தேடி ., தோழி இனியா கூறியபடி ., கடற்கரையோரபங்களா ஒன்றில் தனிமையில் தங்குகிறார். அங்கு ஹீரோ வசிஸ்டாசிம்ஹாவுடன் நிகிஷாவுக்கு காதல் ஏற்படுகிறது. அந்த காதல் பொய் ., தன் நட்பு பொய் , நம்பிக்கை பொய் ... எனும் ஏகப்பட்ட பேரதர்ச்சிகள் நிகிஷாவுக்கும் , ரசிகர்களுக்கும் பின்பாதி படத்தில் காத்திருக்கின்றன... எனும் ... திகில், திருப்பங்கள்தான் கரையோரம் படத்தின் கலக்கலான மீதிக்கதை!
முன் பாதி படத்தை நிகிஷாவின் கவர்ச்சியை நம்பியும் , பின்பாதி படத்தை திகில் , திருப்பங்களை நம்பியும் பட மாக்கியிருப்பதில் இயக்குனர் ஜெஎஸ்கே சைலன்ட்டாக வெற்றி பெற்றிருக்கிறார்.
கதா நாயகராக வசிஸ்டா சிம்ஹா ., குதிரையேற்றம் , படகுசவாரி....என நிகிஷாவை வசீகரிக்கிறார்.
கதையின் நாயகியர்களாக ., நிகிஷா பட்டேல் , செமகிளாமர் கலக்கல் .
இனியா , சைலண்ட்வில்லியாக வயலண்ட் காண்பித்திருக்கிறார்.
க்ளைமாக்ஸ் இருபது நிமிடங்களே வந்தாலும் சிம்ரன் ., சிறப்பு அதிரடியில் சிறப்பித்திருக்கிறார். வாரே வா....!
நிகிஷாவின் பணக்காரஅப்பா கேரக்டரில் ராதாரவி , நிகிஷாவின் தங்கை புருஷனாக கணேஷ் இருவரும் பாத்திரமறிந்து பளிச் சிட்டுள்ளனர்.
ஜெய்ஆனந்த்தின் ஒளிப்பதிவில் கடற்கரை பிரதேசங்களும் , நிகிஷாவின் கவர்ச்சி பிரதேசங்களும் அமர்க்களம். சுஜீத்ஷெட்டியின் இசையில், பாடல்களை விட பின்னணி இசை மிரட்டல்!
நிகிஷா பட்டேலின் கண்களை மிரளச் செய்யும் கவர்ச்சியையும் சிம்ரனின் ஆக் ஷனையும் மட்டுமே நம்பி ஜெகேஎஸ் எனும் ஜெகதீஷ் குமாரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அவ்வளவாக நம்ப முடியாத கிளாமர் திரில்லர் கதை ...என்றாலும்., லாஜிக் பார்க்காமல் "கரையோரம் " படம் பார்த்தோமென்றால் இப்படம் அழகாக ரசிகர்களின் நெஞ்சோரம் இடம் பிடிக்கும் நிகிஷாவுக்காக ...
ஆக மொத்தத்தில் ., நிச்சயம் , கரையோரம் கிளாமர் , பிரியர்களின் நெஞ்சாங் கூட்டோரம்!