Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

லைலா ஓ லைலா(மலையாளம்)

லைலா ஓ லைலா(மலையாளம்),laila o laila
ஜோஷி இயக்கத்தில் வௌிவந்துள்ள படம் தான் லைலா ஓ லைலா.
16 மே, 2015 - 12:12 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » லைலா ஓ லைலா(மலையாளம்)

இந்திய அரசாங்கத்தின் சீக்ரட் ஏஜெண்ட் மோகன்லால்.. ஏற்கனவே விவாகரத்தான மோகன்லாலை கோடீஸ்வரரின் மகளான அமலாபால், விரும்பி திருமணம் செய்துகொள்கிறார். தனது வேலை பற்றி மனைவிக்கு கூட தெரியாமல் ரகசியம் காப்பதற்காக மோகன்லால் சின்னச்சின்ன பொய்கள் சொல்ல, அதுவே அவர் மீது அமலாபாலுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


ஒருகட்டத்தில் தன்னைப்பற்றிய உண்மையை அமலாபாலிடம் சொல்லிவிடுகிறார். பெங்களூரில் தீவரவாத கும்பல் ஒன்று குண்டுவெடிப்பு நிகழ்த்த இருப்பதாக வரும் தகவலை தொடர்ந்து அதன் தலைவனை சிறைபிடித்து ரகசிய இடத்தில் அடைக்கிறார் மோகன்லால்.. அவனுக்கு நெருக்கமான லைலா என்கிற நாட்டிய பெண்மணி மூலமாக தகவல் அறிய முற்படுகிறார்.


ஆனால் ரகசிய சிறையில் இருந்து தப்பிக்கும் தீவிரவாதி, லைலாவை அழைத்துக்கொண்டு தப்பிக்கும்போது ஏற்படும் விபத்தில் லைலா இறந்துவிட, தீவிரவாதி மட்டும் தப்புகிறான், அமலாபாலை, லைலாவாக நடிக்க வைத்து எதிரிகளை பிடிக்கலாம் என்கிறார் மோகன்லாலின் உயர் அதிகாரி.. அதற்கு அமலாபாலும் சந்தோஷத்துடன் சம்மதிக்கிறார்.. தீவிரவாதிகள் நடத்த இருந்த வெடிகுண்டு விபத்தை அமலாபால் உதவியுடன் மோகன்லால் தடுத்து நிறுத்தினாரா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.


தீவிரவாதிகளின் நாசவேலைகளை அழிக்கும் முயற்சிகளை பல வருடங்களாக வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்திருந்த மோகன்லாலும் இயக்குனர் ஜோஷியும் மீண்டும் அந்த ஏரியாவுக்குள்ளேயே புகுந்து ஜாலம் காட்ட முயற்சித்திருக்கிறார்கள்..


மோகன்லால் சீக்ரெட் ஏஜெண்ட் என்பது பார்க்க நன்றாக இருந்தாலும், கதையில் அதிக நேரம் மனைவி அமலாபாலுடன் செலவிடும் காட்சிகளாகவே இருப்பதை கட்டாயம் தவிர்த்திருக்க வேண்டும். படத்திற்கு அது மிகப்பெரிய மைனஸ் ஆகவே அமைந்துள்ளது.. ஆனால் மோகன்லால், அமலாபால் நடிப்பில் எந்த குறையும் சொல்ல முடியவில்லை.


எதிரிகளையும் அவர்களின் திட்டங்களையும் கண்டுபிடிக்க மோகன்லால் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் இடைவேளைக்கு அரைமணி நேரம் முன்னதாக தொடங்கும் போதுதான் விறுவிறுப்பும் கூட ஆரம்பிக்கிறது. எதிரிகளை தனியாளாக அழிக்கும் ஒன் மேன் ஷோவை அசால்ட்டாக நிகழ்த்தி காட்டியிருக்கும் மோகன்லாலை, ஆரம்பகட்ட திருமண, குடும்ப வாழ்க்கை சம்பந்தப்பட்ட காட்சிகள் பலவீனப்படுத்தவே செய்திருக்கின்றன.


மோகன்லால் - ஜோஷி கூட்டணியின் முந்தைய படமான 'ரன் பேபி ரன்' படம் போல இருக்கும் என எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு அதில் பாதியளவு தீனி கூட இருவரும் போடவில்லை என்பதுதான் வருத்தத்திலும் வருத்தம். இதில் முக்கிய பங்கு படத்தின் கதாசிரியரான சுரேஷ் நாயரைத்தான் சேரும்.. இயக்குனர் ஜோஷி தயவு செய்து தனது முந்தைய கதாசிரியர்களை தேடிச்செல்வது தான் சாலச்சிறந்தது.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in