இந்தியர்கள் இருவர், பாஸ்போர்ட் இல்லாமல், பாகிஸ்தானின் கராச்சி நகரில் தரையிறங்குகின்றனர். அதற்கு பின் அவர்கள் எதிர்கொள்ளும் மாற்றங்கள் என்ன என்பதே வெல்கம் டு கராச்சி படத்தின் மையக்கரு.
ஷம்மி தாகூர் (அர்ஷத் வர்ஷி) மற்றும் கேதார் படேல் (ஜாக்கி பாக்னானி) இருவரும் கோமாளித்தனம் செய்துள்ளனர். ஷம்மியும், கேதாரும் படகில் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது புயல் வீசியது. அந்த புயலால், படகு நீரில் மூழ்கியது. இதிலிருந்து தப்பிய இருவரும், எதிர்பாராதவிதமாக, பாகிஸ்தானின் கராச்சி நகரை சென்றடைகின்றனர். படகு மூலம் எப்படி கராச்சிக்கு செல்லலாம் என்ற மாபெரும் குழப்பத்துடன் படம் துவங்குகிறது. அவர்கள் மீண்டும் இந்தியா திரும்பினரா? என்பதே படத்தின் மீதிக்கதை...
படத்தின் முதல்பாதியை, சிறப்பாக தந்ததற்கு இயக்குநர் ஆஷிஷ் மோகனுக்கு ஒரு கங்கிராட்ஸ். படத்தின் இடைவேளை வரை, கதையை சிறப்பாகவும், அதேநேரம் நகைச்சுவையாகவும் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால், படத்தின் இரண்டாவது பாதியில், இயக்குநர் சொதப்பிவிட்டார். படம் திக்குதிசை தெரியாமல் தாறுமாறாக ஓடுகிறது. படம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம். படத்தின் நீளம், மற்றும் பாடல்கள், படம் பார்ப்பவர்களை விரைவில் சோர்வடைய வைத்துவிடுகிறது. இரண்டாவது பாதியின் குழப்ப காட்சிகளின் காரணமாக, நன்றாக இருந்த முதல்பகுதி சப்என்று ஆகிவிடுகிறது.
குஜராத் சிறுவன் கேதார் படேல் கேரக்டரில், நடித்துள்ள ஜாக்கி பாக்னானி, நடிப்பில் சிறப்பு காட்டியுள்ளார். அர்ஷத் வர்ஷி, படத்தில் வீணடிக்கப்பட்டுள்ளார். வேண்டாவெறுப்பாவே, அவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது, அவர் நடிப்பிலிருந்தே தெரிகிறது.
இந்த படத்திற்கு போயி பணத்தையும், நேரத்தையும் வீணடிக்காததே புத்திசாலித்தனம்...
ஸ்டார் : 2/5