அன்று மனிதன், பெண் மீது மோகம் கொண்டான், மண் மீது மோகம் கொண்டான், கார், பங்களா, அதிக அளவில் சொத்து சேர்ப்பது என்று அதிகளவில் வெறிகொண்டு அலைந்தான். இதில், குறிப்பாக, பெண் மீது கொண்ட காதல் நிறைவேறாவிட்டால், அவளை ஆசிட் வீசி கொலை செய்கிறான் அல்லது தான் விஷம் குடித்து சாகிறான். இதில் கைபேசி காதல் படத்தின் நாயகன் முற்றிலும் மாறுபட்டவன். அவனது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பது ஒரு செல்போன். அவனது வாழ்க்கையின் சந்தோஷம், துக்கம் அனைத்தையும் அது தீர்மானிக்கிறது. அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், செல்போனோடு தான் கடந்துபோகிறது. அதனால், அவனுக்கு செல்போன் மீதே காதல் வந்துவிடுகிறது. அதன்பிறகு அவனது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் விபரீதமானது. தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான கதை கைபேசி காதல் படத்தின் கதையாகும்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படம் வெளியிடும் பணிகளில், படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த படத்தை த. சக்திவேல் தயாரிக்க, திம்மம்பள்ளி சந்த்ரா என்ற புதிய இயக்குநர் இயக்கியிருக்கிறார். இதில், கிரண், அர்பிதா, தர்ஷன், மாஸ்டர் விக்னேஷ், டாக்டர் சூரி இவர்களுடன் நடிகர் கிஷோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு - ராகேஷ் பி.திலக், இசை - விஜய் கிருஷ்ணா, மக்கள் தொடர்பு - பெரு. துளசி பழனிவேல்
தயாரிப்பு நிர்வாகம் - சிவக்குமார்
தயாரிப்பு - த.சக்திவேல்
கதை, திரைக்கதை, வசனம், டைரக்சன் - திம்மம்பள்ளி சந்த்ரா