முருகன் சுப்பராயனுடன் டாக்டர் செல்வ.தியாகராஜன் இணைந்து ஸ்மைலி பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படம் சாலையோரம்.
புதுமுகம் ராஜ், செரீனா அறிமுகமாக வில்லனாக, வித்தியாசமான கேரக்டரில் பாண்டியராஜனும், காமெடியனாக சிங்கம்புலியும், பாய்ஸ் ராஜன், முத்துக்காளை, லொள்ளு சபா மனோகர் ஆகியோரும் நடிக்கின்றனர்.
பி.வாசுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய க.மூர்த்திகண்ணன், இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். சிங்கப்பூரில் இருந்து எஸ்.சேதுராம் என்ற புதியவர் இசையமைப்பாளராக அறிமுகமாக, யுகபாரதி, பிரான்சிஸ் கிருபா, தனிக்கொடி இவர்களுடன் இந்த படத்தின் இயக்குநர் மூர்த்தி கண்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்கள். தினேஷ் ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவு செய்ய, செல்வராஜா படத்தொகுப்பு செய்ய, ஏப்ரல் இறுதியில் திரையை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது சாலையோரம்...
கேட்டதெல்லாம் கிடைக்கும் வரமான வசதியான வாழ்க்கை பெற்ற ஒருத்தி தனக்கு கிடைக்காத ஒன்றை காதலித்தாள் எந்தப் பெண்ணும் நினைத்துப் பார்க்கமுடியாத அந்த ஒன்று அவளுக்கு கிடைத்ததா? அது என்ன? என்பதே கதை. இதுவரை இந்திய சினிமாவிலேயே எடுத்தாளப்படாத கதைக்களம், சிறந்த பொழுதுபோக்கு திரைக்கதையில் வித்தியாசமான உணர்வை கொடுக்கும் முயற்சி.....