ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் தவறி விழுந்து இரத்த வெள்ளத்தில் இறந்து விடுகிறாள். சற்று நேரத்திற்கு பின் அதே பெண் உயிருடன் வருகிறாள். அனைவரும் ஆச்சர்யப்படுகிறார்கள். கண் முன்னே நடப்பது என்ன என்று திகைக்கின்றனர். இறந்த பெண் தவறிதான் விழுந்தாளா? இல்லை தள்ளிவி்ட்டு கொலை செய்தனரா? அவ்வாறெனில், உயிருடன் இருப்பவள் யார்? என ஆயிரம் கேள்விகளுக்கு விடை சொல்லும் படம் தான் ஸ்வர்ண மகால்.
டாக்டர் உமா வழங்க ஏ.டி.எம்.மேக்கர்ஸ் சார்பில் சாதன், தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரித்து இயக்கி உள்ளார்.
ஒளிப்பதிவு - ஹரீஷ், இசை - ஹெச்.கே.பிருந்தா
எடிட்டிங் - செல்வா
கதை, திரைக்கதை, தயாரிப்பு, வசனம், இயக்கம் - சாதன்
மனோஜ் (கதாநாயகன்), அலிஷா (கதாநாயகி), ஓம் செரூத், ராமராஜூ, சுமன் ஷெட்டி, ரத்தினகுமாரி....
இதன் படப்பிடிப்பு சென்னை, விஜயவாடாவில் 50 நாட்களில், இரு கட்ட படப்பிடிப்பாக நடைபெற்றது.
படத்தில் பாடல்கள் இல்லை, சண்டைக்காட்சிகள் இல்லை...முழுக்க முழுக்க த்ரில்லர் படம்.
சென்னை சாலிக்கிராமத்திலுள்ள நிவேதா ஸ்டூடியோவில் பின்னணி குரல் பதிவு மற்றும் பின்னணி இசை சேர்ப்பு நடைபெற்று வருகிறது.