கோவில் சிற்பங்களை வடித்து, புனரமைத்து கோபுரங்களை கட்டி கும்பாபிஷேகம் நடத்துகிறவர் ஸ்தபதி. அப்படிப்பட்ட ஸ்தபதிகளில் ஒருவர் சினிமா ஹீரோவாகியிருக்கிறார். அவரது பெயர் மாதேஸ். சாந்தன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் காஷிகா. சுகுமார் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். சாம்ராஜ் இயக்குகிறார்
படத்தில் நடிப்பது பற்றி மாதேஸ் கூறியதாவது: எனது முழு பெயர் மாதேஸ்வரன். அடிப்படையில் நான் ஒரு சிற்பி. ஸ்தபதியாக இருந்து பல கோவில்களில் திருப்பணி செய்து வருகிறேன். எனது நண்பன் சாம்ராஜ் சினிமா ஆசையில் இருந்தான். அவருக்கு உதவ இந்தப் படத்தை தயாரிக்க முன் வந்தேன். நானே நடிக்க வேண்டும் என்ற கேட்டுக் கொண்டார் அதனால் நடிக்கிறேன். தம்பிக்காக உழைக்கும் அண்ணன் கேரக்டர். சாந்தனாக இருப்பவர். தம்பிக்காக எப்படி கொடூரமானவனாக மா-றுகிறான் என்பதுதான் கதை.
படப்பிடிப்பை முடித்து விட்டோம். விரைவில் வெளியிட இருக்கிறோம். சிறிய பட்ஜெட்டில் குறுகிய நாட்களில் எடுக்கப்பட்ட படம் இது. நான் ஸ்தபதி என்பதால் அந்த பொறுப்பை உணர்ந்து எந்த வித முகசுழிப்பும் இல்லாத தரமான படத்தில்தான் நடித்திருக்கிறேன். என்கிறார் மாதேஸ்.