ஒரு கொலைக்கு சாட்சியாக இருக்கிற ஒரு மரம், கொலைகாரர்களை எப்படி பழிவாங்குகிறது என்பதை திகிலுடன் கூறும் கதை.
செய்த தவற்றை உணர்ந்தால் மன்னிப்பது மனிதர்களும், தெய்வங்களும் மட்டுமல்ல, ஆன்மாக்களும் தான் என்ற கருத்தையும் கூறுகிறது.
மற்ற தொழிற்கல்வியை போல திரைப்பட கல்வியும் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற பத்மஸ்ரீ கமல்ஹாசன் கருத்திற்கேற் ஜெம்ஸ் திரைப்பட கல்லூரி மாணவர்களின் முழுப்பங்களிப்பில் உருவாகி வரும் படம் மரப்பாச்சி. அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தும் வகையில் இப்படம் அமைந்துள்ளது.
ஜெம்ஸ் பிக்சர்ஸ் தயாரி்ககும் மரப்பாச்சி படத்தில் வவ்வால் பசங்க படத்தில் வில்லனாக நடித்த முருகானந்தம், வசந்த் என்ற பெயரில் கதாநாயகனாக நடிக்கிறார். சுகன்யா கதாநாயகியாக அறிமுகமாகிறார். சாத்தையா, மகேந்திரன், இளங்கோவன், கிருஷ்ணவேணி, தேவி, மாஸ்டர் வசந்த கணேஷ், பேபி ஹரிணி, ஜெயந்தி, தங்கராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
பாடல்கள் : முத்துலிங்கம்
இசை : பாலகணேஷ்
எடிட்டிங் : டி. நாகராஜ்
நடனம் : ரமேஷ்
கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் : கே.எஸ்.முத்துமனோகர்
மதுரை, புதுக்கோட்டை, திருவாரூர், மேலூர், கொடைக்கானல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்துள்ளது.