தினமலர் விமர்சனம்
இன்பார்மர் எனும் பெயரில், போலீஸ்க்கு துப்பு கொடுப்பவர்களை போலீஸில் உள்ள சில சுயநல அதிகாரிகள் எவ்வாறு? பயன்படுத்திக் கொண்டு பின் பந்தாடுவார்கள்....? என்பதை.., அனுசரன் இயக்கத்தில் அழகாக படம் பிடித்து காட்டியிருக்கும் படம் "கிருமி.
பொண்டாட்டி சம்பாத்தியத்தில் நட்பு, வம்பு... என ஜாலியாக சுற்றி வரும் நாயகர் கதிர்., அடுத்த வீட்டுக்காரர் சார்லி வாயிலாக போலீஸ் - இன்பார்மர் ஆகிறார். இன்பார்மர் வேலையில் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே அந்த ஏரியா இன்ஸ்பெக்டரிடம் நல்ல பேர் எடுக்கும் கதிர்., தனக்கு வேண்டாத சூதாட்ட கிளப் "கம்"பாரை இன்ஸிடம் எக்கச்சக்கமாய் பணம் புழங்குவதாய் சொல்லி போட்டுக் கொடுக்கிறார். அதன் விளைவு தனக்கு பிடிக்காத அடுத்த ஏரியா ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரின் லிமிட்டில் வரும் அந்த சூதாட்ட பாரை இவரது ஏரியா இன்ஸ்" சீஸ் செய்து அங்கு இருக்கும் 25 லட்சத்தை லபக்குகிறார்.
அதனால் ஏற்படும் பிரச்சினையில் கதிரை குறிவைத்து ஒரு கும்பல் கொலை வெறியுடன் கிளம்புகிறது. அந்த கும்பலின் கைகளில் சிக்கி கதிருக்கு வேலை வாங்கி தந்த சார்லி காலியாக தப்பிபிழைக்கும் கதிர், அடுத்தடுத்து சந்திக்கும் அதரிர்ச்சி சம்பவங்களும், நம்பிக்கை துரோகங்களும தான் கிருமி படத்தின் கதை, களம்... எல்லாம்.
பொண்டாட்டி காசில் சாப்பிடும் புருஷனாகவும், போலீஸ் இன்பார்மராகவும் இருவித கெட்-அப்களிளும் கதிர், தன் முந்தைய படமான "மதயானை கூட்டம்" படத்தில் நடித்ததைக் காட்டிலும் ஒரு பங்கு கூடுதலாக நடித்து கவர்ந்திருக்கிறார். விளையாட்டு தனமாக தான் செய்த இன்பார்மர் வேலையில், சார்லி, பலியானது கண்டு பதறுவதிலும் சரி..., நம்பிக்கை துரோக இன்ஸ்ஸைப் பார்த்து இறுதியில் ஒதுங்கி போவதிலும் சரி..., அதிகாரவர்க்கத்தை, எதித்து சாமானியர்கள் எதுவும் செய்ய முடியாது என்பதை சரியாக பிரதிபலித்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
கதிரின் மனைவியாக ஒரு கைக்குழந்தையுடன் தயாக ரேஷ்மி மேனன் கச்சிதம். அந்த ஒரு படுக்கையறை பாடல் காட்சியில் "பலே சொல்லும் அளவிற்கு கதிருடன் கட்டிபுரண்டு யாதார்த நடிப்பை கொட்டி தீர்த்திருக்கிறார் பேஷ், பேஷ்!
சார்லியின் யதார்த்த நடிப்பும் படத்திற்கு பெரும்பலம். அவருக்கு இண்டர்வெல் பிளாக்கில் ஏற்படும் முடிவு பரிதாபம்.
'இன்ஸ் களாக வரும் மாரிமுத்து, டேவிட் சாலமன் இருவரும் இன்றைய நம்மூர் போலீஸை பக்காவாக படம் பிடித்து காட்டியுள்ளனர். அதேமாதிரி., பார் உரிமையாளர் தென்னவன், சார்லியின் மாற்றுத்திறனாளி மனைவி, கதிரின் மாமியார், அக்கா வனிதா மற்றும் பன்னி மூஞ்சி வாய் காமெடி நண்பர் உள்ளிட்டவர்களின் நடிப்பும் ஆஹா, ஒஹோ !
இருட்டிலும் மிளிரும் அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு, பெரும் உழைப்பு. கே-வின் இசையும், புதியவர் எஸ்.ஞானகரவேலின் பாடல் வரிகளும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
அனுசரணின் எழுத்து, இயக்கத்தில், ஆக்ஷ்ன் க்ளைமாக்ஸ்களையே பார்ர்த்து, பழக்கப்பட்ட நமக்கு, சாமான்யனால் அதிகாரவர்க்கத்தை எதிர்த்து, எதுவும் செய்ய முடியாது... எனும் ரீதியில சற்றே "சப்" என்று முடியும் க்ளைமாக்ஸ் மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மற்றபடி, கிருமி'' - சட்டத்தை கையில் வைத்துக் கொண்டு சமூக அவலங்களை சளைக்காமல் செய்யும் காவல் துறையின் கறுப்பு ஆடுகளுக்கு எதிராக சரியாக ''பொருமி'' இருக்கிறது.