படிக்கிற வயதில் ஏற்படும் காதலினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதனால், இவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. பெற்றோர்களின் இரண்டு குடும்பங்களும் பாதிக்கப்பட்டு அவல நிலைக்கு ஆளாகின்றனர். விவரம் அறியா இந்த குமரப்பருவத்தில், எழும் காதலை அலசி ஆராய்ந்து சொல்லும் கதை என்கிறார் இயக்குனர் பி.ஆனந்த்.
குட் டே மூவிஸ், ஸ்ரீ செந்தூர் மூவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சூரியபிரகாஷ் கதாநாயகனாகவும், நூர்யா கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். அசோக்ராஜ், வினோஜ்தாமஸ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு சேலம் குமாரபாளையம், பவானி, ஈரோடு, கோவை, சென்னை போன்ற இடங்களில் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று முடிவடைந்து விட்டது. இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.