பதவி, பேராசை, சொத்து, சுகம், போதை என்று இன்றைய உலகில் இளைஞர்களை ஆட்டிப்படைக்கிறது. இதனால், இவர்களது வாழ்க்கைப் பாதை, துன்பங்கள், துயரங்களுடனும் வெவ்வேறு விதமாக மாறி, எந்த நிலைக்கு ஆளாகிறார்கள் என்பதை அழகாக படம் பிடித்து காட்டும் கதை தான் சூரத்தேங்காய்.
மாருதி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி படத்தில் கதாநாயகனாக நடித்த குரு அரவிந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சாமந்தி அறிமுகமாக, தேனிமுருகன், காதல் காமாட்சி, ஜெயமணி, செல்வதுரை, அதிரவன், யுக்திவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.
வசனம், தயாரிப்பு : சக்தி
கதை, திரைக்கதை, நடனம், இயக்கம் : சஞ்சீவ் ஸ்ரீனிவாஸ்
இவர் பிரபுதேவா, லாரன்ஸ் ஆகியோரிடம் நடன உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
இதன் படப்பிடிப்பு தேனி, மூணாறு, வருசநாடு போன்ற இடங்களில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.