லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களும் சரி லவ் பக்கமே தலை வச்சு படுத்ததே இல்லைன்னு சொல்றவங்களும் சரி அவங்கள்ல எத்தன பேரு அவங்களோட பையனோ பொண்ணோ லவ் பண்ணுனா அவங்களோட லவ்வ புரிஞ்சுக்கிட்டு அவங்கள ஒன்னு சேத்து வச்சு சந்தோசப்படுறாங்க...
லவ்வுறங்குற வார்த்தைய கேட்டாலே கடவுள் கூட இன்னும் கொஞ்ச நாள்ல கல்லெடுத்து கண்டிப்பா அடிக்க ஆரம்பிச்சிருவான்...ஏனா அந்தளவுக்கு ஒரு காலத்துல இதயபூர்வமா நேசிக்கபட்ட சுவாசிக்கபட்ட லவ் இன்னைக்கி லவ்வுங்குற பேர்ல நாம அடிக்கிற கூத்தால தெருவுல ஓட்ற சாக்கடைய விட கேவலமா மாறிடுச்சுன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வோரு விதமா வசபாடிக்கிட்டு இருக்கையில...
அன்பை மட்டுமே ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு புழுதிகாட்டின் அடையாளமாய் அழுக்கு முகங்களோடு முகங்களாக கைகளுக்கு எட்டாத கற்பனைகளுடன் திரியும் இருவருடைய அன்பின் உச்சத்தை...இன்று சமூகத்தை மிகக் கொடூரமான முறையில் சீரழித்துக் கொண்டிருக்கும் இன்னொரு முக்கியமான பிரச்சனையுடன் கலந்து அழகிய கிராம வாசணையுடன் சொல்ல வருகிறது “மஞ்சள் குங்குமம்”
மதுரை மாவட்டத்தை சுற்றி எங்கும் கிராமத்துக்கே உரித்தான செம்மண் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது...
படப்பிடிப்பு நடைபெற்ற மொத்த நாட்கள் 58...
தற்போது டப்பிங் முடிந்து மற்ற இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது...
இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறும்...