ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழகத்தின் அடுத்த தலைமுறை பாடகர்களை தேடும் சரிகமப சாலஞ்ச் 2012 நிகழ்ச்சி, இறுதிச் சுற்றை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இசையமைப்பாளர் பரத்வாஜ், உன்னிமேனன், ரைஹானா, ஹரிஷ் ராகவேந்திரா, பிரசாந்தினி, மோகன் வைத்தியா உள்ளிட்டவர்களை நடுவர்களாக கொண்டு நடைபெற்று வரும் இப்போட்டி நிகழ்ச்சியில், தற்போது தமிழகம் முழுவதிலுமிருந்து தலை சிறந்த 7 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். இந்த 7 போட்டியாளர்களும் கோவை மாநகரில் அமைந்துள்ள பன் ரிபப்ளிக் மாலிலும், 16-ம் தேதி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யு மாலிலும் கலந்து கொள்கிறார்கள். தேர்வாகும் ஐந்து போட்டியாளர்களும் நேரடியாக மக்களின் முன்னிலையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இசை உலகின் ஜாம்பவான்கள் முன்னிலையில் விரைவில் நடைபெறும். இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் போட்டியாளர் ஒருவருக்கு சினிமாவில் பின்னணி பாடும் வாய்ப்பு நிச்சயம். பரபரப்பான தருணத்தை அடைந்திருக்கும் ‘சரிகமப’ நிகழ்ச்சி, வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.