‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அந்நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான பென்னி தயால் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களின் ஆதரவோடு 7 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது 8வது சீசனும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனின் நடுவர்களாக அனுராதா ஸ்ரீ ராம், எஸ்.பி.சரண் மற்றும் பென்னி தயால் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த முடிந்த எபிசோடில் ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டார்.
ஸ்ரீதர் சேனாவின் வெளியேற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் நடுவர்களை கடுமையாக குற்றம் சாட்டி பதிவிட்டு வருகின்றனர். இதனால் மனமுடைந்த நடுவர்களில் ஒருவரான பென்னி தயால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இனி நான் சூப்பர் சிங்கர் 8 தொடர்பாக எதையும் பதிவிட மாட்டேன். என்னால் அத்தனை வெறுப்பைக் கக்கும் செய்திகளைத் தாங்க முடியவில்லை. நீங்கள் இதுவரை காட்டிய அத்தனை அன்புக்கும் நன்றி. நானும் ஒரு மனிதன் தான். போதும். நன்றி. நிகழ்ச்சியின் அடுத்த சீஸனில் உங்களைப் பார்க்க மாட்டேன்” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.