இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "தமிழும் சரஸ்வதியும்" தொடர், டி.ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல புள்ளிகளை பெற்று ஹிட் அடித்துள்ளது. தீபக் மற்றும் நக்ஷத்திரா நடிப்பில் "தமிழம் சரஸ்வதியும்" என்ற நெடுந்தொடர் கடந்த ஜுலை 12 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றுள்ளது.
தற்போது, இந்த தொடருக்கு கிடைத்த டி.ஆர்.பி ரேட்டிங் தான் தொலைக்காட்சி வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. "தமிழும் சரஸ்வதியும்" தொடரின் முதல் எபிசோட் இதுவரை இல்லாத அளவில் அதிக பார்வையாளர்களை பெற்று டி.ஆர்.பியல் அதிக புள்ளிகளை பெற்றுள்ளது.
ஒரு தொடரின் முதல் எபிசோடுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தான், அந்த தொடரின் வெற்றி தோல்வி தீர்மாணிக்கப்படுகிறது. அந்த வகையில் "தமிழும் சரஸ்வதியும்" தனக்கான பார்வையாளர்களை முதல் எபிசோடிலேயே கவர்ந்து இழுத்து கொண்டது.
முதல் வாரத்திலேயே டிஆர்பி ஹிட் அடித்திருக்கும் தமிழும் சரஸ்வதியும் தொடருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.