'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விறுவிறுப்பான ரோஜா தொடரில், செய்யாத குற்றத்தில் ரோஜாவுக்கு ஜாமீன் கிடைக்காமல் போகிறது. சிறையில் அவருக்கு நிகழவிருக்கும் ஆபத்தை தெரிந்து கொள்ளும் அர்ஜுன் தனது மனைவியை காப்பாற்ற யாருமே எதிர்பாரத காரியம் ஒன்றை செய்கிறார்.
ரோஜா சீரியலில், அனுவை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் ரோஜா கைது செய்யப்படுகிறார். இந்த வழக்கில் ஆஜராகும் டைகர் மாணிக்கம் ரோஜாவிற்கு ஜாமீன் கிடைக்க கூடாதென வாதிட்டு வெற்றி பெறுகிறார். மேலும், சாக்ஷி மூலம் ரோஜாவை சிறையில் வைத்தே கொலை செய்ய திட்டமிடுகிறார். இதை தெரிந்து கொண்ட அர்ஜுன் தன் மனைவியை காப்பாற்ற டைகர் மாணிக்கத்தின் சட்டையை கோர்ட்டில் வைத்து நீதிபதி முன்பே பிடிக்கிறார். இதனால் அவருக்கு தண்டனையாக ஒரு நாள் சிறைக்காவல் அளிக்கப்படுகிறது. சிறைக்கு செல்லும் அர்ஜூன் அருகில் வேறு சிறையில் தன் மனைவியை எப்படி காப்பாற்ற போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிர வைத்துள்ளது.