வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விஜய் டி.வி. நடத்திய சூப்பர் சிங்கர் ஜுனியர்-3 பாட்டுப் போட்டியில் சிறந்த பாடகராக ஆஜித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. விஜய் டிவியில் கடந்த ஓராண்டாக நடந்து வந்த சூப்பர் சிங்கர் - 3 பாட்டுப்போட்டி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து ஐந்து இறுதிப்போட்டியாளர்கள் பிரகதி, சுகன்யா, கவுதம், ஆஜித், யாழினி பாடுவதை ரசித்தார். போட்டியாளர்கள் சேலஞ்சிங் சுற்று மற்றும் பிரீ ஸ்டைல் சுற்றில் தலா இரண்டு பாடல்கள் பாடினர்.
போட்டியின்போதே ரசிகர்கள் எஸ்.எம்.எஸ். மற்றும் இணையதளத்தின் மூலமாக இளைய பாடகர்களுக்கு ஓட்டளித்து வந்தனர். போட்டி முடிவடைந்ததும் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையேறி வெற்றி பெற்றவர்களின் பெயர்களை அறிவித்தார். சூப்பர் சிங்கர் ஜுனியர் 3 போட்டியில் முதல்பரிசு பெற்ற வெற்றியாளராக ஆஜித் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஸ்ரீபெரும்புதூர் ஒரகடத்தில் 3 படுக்கைகளுடன் கூடிய சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீட்டின் சாவியை ரஹ்மான் வழங்கினார்.
இரண்டாவது இடத்தை பெற்ற பிரகதிக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்தைப் பெற்ற யாழினிக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகை வழங்கப்பட்டது. மேலும் சுகன்யாவிற்கும், கவுதமிற்கும் தலா ரூ.2 லட்சம் பரிசுத்தொகையை விஜய் டிவி வழங்கியது. நிகழ்ச்சியில் பிரபல பாடகிகள் சித்ரா, மால்குடி சுபா, சுதா ரகுநாதன், விஜய பிரகாஷ், சீனிவாஸ், மனோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.