'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வெள்ளித்திரையில் தனது புன்னகையால் ரசிகர்களை வசீகரித்த நடிகை மந்த்ரா, சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியிருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 25 வாரங்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை தற்போது நடிகை மந்த்ரா தொகுத்து வழங்குகிறார். 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரையில் அடியெடுத்து வைத்திருப்பது குறித்து மந்த்ரா அளித்துள்ள பேட்டியில், நிஜமாகவே நான் எதிர்பார்த்திராத அனுபவங்கள் இந்த நிகழ்ச்சியில் கிடைக்கிறது. இதில் கவிதை பற்றியும் பேசலாம். சமையல் பற்றியும் பேசலாம். எது பற்றியும் பேசலாம். இந்த வாரம் மதுரை பற்றி பேசினோம். மதுரை என்றாலே மல்லி, மீனாட்சியம்மன் கோவில், ஆயிரங்கால் மண்டபம் நினைவுக்கு வரும். ஆனால் போட்டியாளர்களிடம் பேசும்போது மதுரை பற்றி அதற்கு மேலும் எத்தனையோ சிறப்புக்களை தகவல்களாக கொட்டினார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுடனான என் பிணைப்பு இப்போது இன்னும் இறுகியிருக்கிறது. அந்தவிதத்திலும் இந்த நிகழ்ச்சி எனக்கு ஸ்பெஷல், என்று கூறியுள்ளார்.
மீண்டும் சினிமாவில் நடிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கும் மந்த்ரா, தற்போது தெலுங்கில் மங்கா என்ற படத்தில் டைட்டில் ரோலில் நடித்து வருகிறேன். தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கிறேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும், என்று கூறியிருக்கிறார். ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சி ஜி தமிழ் தொலைக்காட்சியில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.