டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் நடத்தும் "குரோர்பதி நிகழ்ச்சியில், ரயில்வே ஊழியர், மனோஜ் குமார் ரெய்னா, ஒரு கோடி பரிசு வென்றுள்ளார். தனியார், "டிவியில், நடிகர் அமிதாப் பச்சன் நடத்தி வரும், "கவுன் பனேகா குரோர்பதி என்ற, நிகழ்ச்சி, நாடு முழுவதும், ஏராளமான நேயர்களைக் கொண்டது. இந்த நிகழ்ச்சியின், ஆறாவது சீசன் போட்டியை, அமிதாப், தற்போது நடத்தி வருகிறார்.இந்தப் போட்டியில் கலந்து கொண்ட, ரயில்வே ஊழியர், மனோஜ் குமார் ரெய்னா, இறுதி வரை சரியான பதில்களை கூறி, ஒரு கோடி ரூபாய் பரிசை தட்டிச் சென்றுள்ளார். இந்த சீசனின், முதல் வெற்றியாளர் இவரே. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ரெய்னா, அந்த மாநிலத்தில் இருந்து, "குரோர்பதி போட்டியில், கலந்து கொண்ட முதல் நபர். வெற்றி குறித்து, ரெய்னா அளித்த பேட்டி:"போட்டியில் ஜெயிப்பேன் என, நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அமிதாப்பின் தீவிர ரசிகனான நான், அவர் சந்தோஷமாக இருந்தால், சந்தோஷமாக இருப்பேன். அவருக்கு கஷ்டங்கள் வந்தபோது, நானும், பல முறை அழுதிருக்கிறேன்.அவரை பார்ப்பதற்காகவே, போட்டியில் கலந்து கொள்ள, 2000ம் ஆண்டு முதல், முயற்சித்து வந்தேன். போட்டிக்காக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளை பற்றிய, பல்வேறு செய்திகளை, தீவிரமாகப் படித்து வந்தேன்.போட்டியில் வென்றது, மகிழ்ச்சிகரமாக உள்ளது. காஷ்மீரில், எனக்கு இருந்த வீட்டை, பயங்கரவாதிகள் இடித்து விட்டனர். இதனால், ஜம்மு நகருக்கு குடிபெயர்ந்தேன். பரிசுப் பணத்தை கொண்டு, எனக்கென, ஒரு வீட்டை கட்டுவேன். முடியாத ஏழைகளுக்கு உதவி செய்வேன்.இவ்வாறு ரெய்னா கூறினார்.