தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சின்னத்திரை தொடரில் வக்கீலா நடித்து வரும் நடிகை அனுஜா ஐயர், தனது மனதில் தானாக கம்பீரம் வந்திருப்பதாக கூறியுள்ளார். சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு சென்ற அனுஜா ஐயர் விஜய் டிவியில் இரவு பத்துமணிக்கு ஒளிபரப்பாகும் தர்மயுத்தம் தொடரில் வக்கீல் கோட் போட்டு கம்பீரமாக வருகிறார்.
சீரியல் அனுபவங்கள் குறித்து அனுஜா அளித்துள்ள பேட்டியில், சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தாலும் டெல்லியில்தான் மாஸ் கம்யூனிகேசன் படித்தேன். மாடலிங் வாய்ப்போடு சினிமாவும் தேடி வந்தது. உன்னைப்போல் ஒருவன் சினிமாவில் ரிப்போர்ட்டராக நடிக்கும் போதே ஒரு கையில் சிகரெட்டும் மறுகையில் மைக்குமாக தில்லாக நடித்து இருந்தேன். அது பரபரப்பாக பேசப்பட்டது. இப்பொழுது அதேபோல் தில்லான கேரக்டர் சின்னத்திரையில் அமைந்திருக்கிறது.
தர்மயுத்தம் தொடரில் கார்த்திக்குக்கு ஜோடியாக நடிக்கிறேன். இது சீரியல் என்பதை விட சீரியஸான தொடர் என்றே சொல்ல வேண்டும். ஏழு வருடங்களாக குடும்ப விஷயம் ஒன்றுக்காக கோர்டுக்கு போனது இப்போது சீரியலில் நடிக்க ஈஸியாக இருக்கிறது என்கிறார் அனுஜா. சின்னத்திரை தொடர்களிலேயே இந்த தொடர்தான் 5 டி கேமராவில் ஷூட் செய்யப்படுகிறது. இது மாறுபட்ட ஃபார்மேட் என்பதால்தான் இந்த தொடரில் நான் கமிட் செய்து கொண்டேன். இந்த தொடரைப் பார்த்துவிட்டு என் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன. சீரியலுக்காகத்தான் கறுப்பு கோட்டை அணிகிறேன் என்றாலும் மனதில் தானாகவே ஒரு கம்பீரம் வந்து ஒட்டிக்கொள்கிறது, என்று கூறியுள்ளார்.