டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜாக்பாட் நிகழ்ச்சியில் வெற்றியாளர்களுக்கான பரிசுத்தொகையை ஜெயா டிவி அதிகரித்துள்ளது. ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஜாக்பாட் நிகழ்ச்சியை நடிகை சிம்ரன் நடத்தி வருகிறார். அறிவுபூர்வமான கேள்வி-பதில் அதற்கான உடனடி பரிசுகள் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு.
இப்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையின் எண்ணிக்கையும், அவற்றின் மதிப்பும் இரண்டு மடங்காக உயர்த்தப் பட்டிருக்கிறது. பெண்களுக்கான இந்த கேம்ஷோவில் இப்போது ஆண்களும் போட்டியாளர்களாக பங்கேற்கிறார்கள். அவர்களும் பெண்களைப்போலவே பரிசுகளை அள்ளுகிறார்கள் என்பது நிகழ்ச்சியின் கூடுதல் சுவாரசியம். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப பரிசுத்தொகையை உயர்த்தியிருப்பதாக ஜெயா டிவி தெரிவித்துள்ளது.