'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாய் வலம் வந்து, பின்னர் வாய்ப்புகள் இல்லாததால் பலர் சின்னத்திரையில் கால்பதித்து முத்திரை பதித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள சினிமாவில் அறிமுகமாகி, கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணா, சகோதரன் சகோதரி, உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீஜா. தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரை பக்கம் சென்றார். மதுரை சீரியல் மூலம் அறிமுகமான அவர் தற்போது சின்னத்திரையில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறி உள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், மதுரை தான் என்னோட முதல் சீரியல். அதிலேயே எனக்கு தமிழக மக்களிடம் நல்ல அறிமுகம் கிடைச்சது. இப்போது முந்தானை முடிச்சு, சரவணன் மீனாட்சின்னு எனக்குஏற்ற கதை அமைஞ்சிருக்கு. என்னதான் கதாநாயகியாக நடித்தாலும் வில்லியாக நடிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் என் முகமும், தோற்றமும் பார்ப்பதற்கு ரொம்ப சாந்தமாக இருப்பதால் வில்லி கேரக்டர்கள் எனக்கு கிடைக்கவில்லை. அதேபோல் எனக்கும் கிளாமருக்கும் செட் ஆகாது. வருவாய் கிடைக்கிறது. புகழ் கிடைக்கிறதேன்னு மற்றவங்க முகம் சுளிக்கும் அளவுக்கு நடிக்க மாட்டேன். பிடிக்காத கேரக்டரில் எவ்வளவு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன், என்று கூறியுள்ளார்.