தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறவர் அஸ்வதி பாபு. இவர் கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அஸ்வதி பாபு, தனது வீட்டில் போதை பொருளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து திற்கரை போலீசார் அஸ்வதி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து எம்டிஎம்ஏ என்கிற போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக அஸ்மிதாவும், அவரது டிரைவர் பினோய் ஆபிரகாமும் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூர், மும்பையில் இருந்து போதை பொருளை கடத்தி வந்தது, அதை கேரளாவில் நடக்கும் ரகசிய பார்ட்டிகளுக்கு சப்ளை செய்து வந்திருப்பதாகவும், சினிமாவில் உள்ள பலருக்கும் இதில் தொடர்பு இருக்கிறது. அஸ்மிதாவிடம் விசாரணை நடத்தினால் மேலும் பலர் சிக்கவார்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கள்ள நோட்டு அச்சடித்தாக சமீபத்தில் ஒரு மலையாள டிவி நடிகை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.