ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜெமினி படத்தில் ஓ போடு பாடலுக்கு நடனம் ஆடி ஓஹோவென புகழ்பெற்றவர் நடிகை ராணி. வில்லுப்பாட்டுக்காரன் உள்பட சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார். தற்போது நந்தினி என்ற தொலைக்காட்சி தொடரில் நடிகர் சண்முகராஜன் மனைவியாக நடித்து வருகிறார். சுந்தர்.சி தயாரிப்பில் இயக்குனர் ராஜ்கபூர் இயக்கும் பேண்டஸி தொடர் இது.
இந்த தொடரில் நடிக்கும்போது நடிகர் சண்முகராஜனுக்கும், ராணிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ராணி, சண்முகராஜன் கன்னத்தில் அடிக்க வேண்டிய காட்சியில் நிஜமாகவே அடித்துள்ளார். இதனால் சண்முகராஜனும் திருப்பி அடித்துள்ளார். தாக்க வந்த ராணியின் கணவரையும் தாக்கி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராணி, சண்முகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் கூறினார். பின்னர் தொடரின் தயாரிப்பு நிர்வாகம் இருவரையும் அழைத்து பேசியதை தொடர்ந்து புகாரை வாபஸ் பெற்றார். சண்முகராஜன் போலீசில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார்.
ராணி, தன் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்து, தன் இமேஜை கெடுத்து விட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த நடிகர் சங்கம் பலமுறை அழைத்தும் ராணி வரவில்லை. சண்முகராஜன் தன் தரப்பு நியாத்தை சொன்னார். இதனால், தற்போது நடிகர் சங்கம், சண்முகராஜனிடம் மன்னிப்பு கேட்டால் தான் இனி ராணி நடிக்க முடியும் என்று நிபந்தனை விதித்துள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்கம் சண்முகராஜனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நீங்கள் அளித்த கடிதத்துக்கு விளக்கம் அளிக்கும்படி ராணிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு இதுவரை அவர் விளக்கம் அளிக்கவில்லை. நடிகர் சங்க செயற்குழு நேரில் ஆஜராகியும் நீங்கள் விளக்கம் அளித்தீர்கள். உங்கள் மீது பாலியல் புகார் காழ்ப்புணர்ச்சியால் கொடுக்கப்பட்டது என்பதை தாங்கள் அளித்த விளக்கம் மூலம் தெரிந்து கொண்டோம்.
இனிவரும் காலத்தில் நடிகை ராணி திரைப்படங்களிலோ, அல்லது தொலைக்காட்சி தொடரிலோ நடிக்க வரும்போது, தங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே அவர் தொடர்ந்து திரைப்பட துறையில் நடிக்க அனுமதி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.