ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏசியா நெட்டில் ஒளிபரப்பான பரஸ்பரம் என்ற தொடரில் நடித்து புகழ்பெற்றவர் காயத்ரி அருண். தற்போதும் பல தொடர்களில் நடித்து வருகிறார். காயத்ரி அருண் சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். கடந்த சில தினங்களாக அவரது பேஸ்புக் முகவரியில் ஒருவர் தினமும் ஆபாச செய்திகள் அனுப்பி வந்துள்ளார். இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தார் காயத்திரி.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர், "நீங்கள் ஒரு நாள் இரவு என்னுடன் தங்கினால் 2 லட்சம் ரூபாய் தருகிறேன். ஒரு மணி நேரம் தங்கினாலும் போதும்" என்று தகவல் அனுப்பி உள்ளார். இதற்கு குணமா பதில் சொல்லியிருக்கிறார் காயத்ரி அருண்.
அவர் கூறியிருப்பதாவது: உங்கள் தாய், மற்றும் சகோதரிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கும்போது கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
"நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பிறக்கலையா?" என்பதையே இப்படி நாகரீகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இதனை தனது பேஸ்புக்கிலும் வெளியிட்டிருக்கிறார் காயத்ரி அருண்.