தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விளம்பர இடையூறு இன்றி ஆண்டுக்கு 100 படங்களை ஒளிபரப்ப டாடா ஸ்கை நிறுவனம் முன் வந்திருக்கிறது. விஜய் டி.வியுடன் இணைந்து இந்த திட்டத்தை டாடா ஸ்கை நிறுவனம் செயல்படுத்த இருக்கிறது. ஏற்கெனவே மராத்தி, தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த திட்டத்தை டாடாஸ்கை நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. தற்போது டாடாஸ்கை தமிழ் சினிமா என்ற பெயரில் தமிழில் செயல்படுத்த இருக்கிறது.
குடும்ப டிராமா, ஆக்சன், காமெடி, பேண்டசி, என பல வகையான படங்களை கலந்து ஒளிபரப்ப இருக்கிறார்கள். வாரத்திற்கு இரண்டு படங்கள் என்ற வகையில் ஒளிபரப்பாக இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் ஒரு பிரிமியர் படம் இருக்கும். பாகுபலி, தீரன் அதிகாரம் ஒன்று, துப்பாக்கி, விஸ்வரூபம் உள்ளிட்ட படங்கள் பிரிமியர் வரிசையில் திரையிடப்பட இருக்கிறது. இந்த மாதம் பிரிமியர் படமாக விஜய் ஆண்டனி நடித்த காளி ஒளிபரப்பாகிறது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி நடந்தது. டாடா ஸ்கை அதிகாரி அருண் உன்னி, டி.வி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி கலந்து கொண்டனர்.