ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டி.வியில் கடந்த 105 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்திருக்கிறது. நடிகை ரித்விகா டைட்டில் வென்றார். அவருக்கு 50 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களைக் கொண்டு, அதே பிக்பாஸ் வீட்டில், பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை தயாரித்துள்ளனர். இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஹத், ரித்விகா, யாஷிகா, செண்ட்ராயன், பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி அய்யர், மமதி சாரி, பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தங்களது பிக்பாஸ் வீட்டு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பாடகி ரம்யா பாடல்கள் பாடினார். சென்ட்ராயனும், பாலாஜியும் காமெடி நிகழ்ச்சி நடத்தினர். ஜனனி அய்யர், யாஷிகா, மும்தாஜ் நடனம் ஆடினர். இந்த நிகழ்ச்சி நாளையும், நாளை மறுநாளும் (சனி, ஞாயிறு) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.