பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் விஷால் முன்னணி தொலைக்காட்சியில் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரது நெருக்கமான தோழி வரலட்சுமியும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். ஜெயா தொலைக்காட்சியில் உன்னை அறிந்தால் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வருகிற 14ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. இதுகுறித்து வரலட்சுமி கூறியிருப்பதாவது:
மற்றவர்கள் இந்த சமூகத்திற்கு என்று செய்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நான் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். வாருங்கள் இந்த சமூகத்தை மாற்றுவோம். நம்முடன் இந்த உலகமும் மாறும். உன்னை நீ அறிந்தால் அதுதான் சமூக மாற்த்திற்கான முதல்படி என்று தெரிவித்திருக்கிறார்.
வரலட்சுமி, சேவ் சக்தி என்ற பெண்கள் அமைப்பை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும், அதற்கான தீர்வும் இருக்கும் என்று தெரிகிறது. விஷால் நிகழ்ச்சி நடத்தும் சேனலுக்கு எதிர் சேனலில் வரலட்சுமி நிகழ்ச்சி நடத்துவது குறிப்பிடத்தக்கது.