தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல தொகுப்பாளினியான அஞ்சனா, நடிகர் கயல் சந்திரனின் மனைவி ஆவார். இவர் நடிகர் விஜய்யின் தீவிரமான ரசிகை. அதனால் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற விஜய்யின் சர்கார் படத்தை இவர்தான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த விழாவை நடிகர் பிரசன்னாவும், தியாவும் தொகுத்து வழங்கினார்கள்.
அதையடுத்து சர்கார் விழாவை அஞ்சனா தொகுத்து வழங்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று பலரும் அவரது இணைய பக்கத்திற்குள் சென்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அஞ்சனா ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். அது என்னவென்றால், விஜய் பட விழாவை தொகுத்து வழங்குவதை மிஸ் பண்ணி விட்டேன். என் குழந்தையை பார்க்கவே எனக்கு நேரம் சரியாக உள்ளது. என் மீது நீங்கள் வைத்துள்ள அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி என்று தெரிவித்துள்ள அஞ்சனா, என் தோழி தியா நன்றாகவே தொகுத்து வழங்கியிருந்தார். கலக்குமா நீ -என்று பதிவிட்டுள்ளார்.