மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ராதிகா இரண்டு வேடங்களில் நடிக்க 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட 'வாணி ராணி' சீரியல், 1700 எபிசேடுகளைக் கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. அதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக 'சந்திரகுமாரி' என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கிவிட்டார் ராதிகா.
சரித்திரமும், சமூகமும் மாறி மாறிப் பயணிக்கும் வித்தியாசமான சீரியலாக இது உருவாகி வருகிற இந்த சீரியலில், 7 வேடங்களில் நடிக்கிறார் ராதிகா..
சென்னை மற்றும் மும்பையில் மிகப்பெரிய செட்டுகள் போட்டு ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அரச குடும்பம் சார்ந்த கதையை, 'பாட்ஷா' படத்தின் இயக்குநரான சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். நிகழ்காலக் காட்சிகளை சி.ஜே.பாஸ்கர் இயக்குகிறார்.
'தாமிரபரணி' படத்தில் விஷால் ஜோடியாக நடித்த பானு, இதில் ராதிகாவின் மகளாக நடிக்கிறார். நிரோஷா, உமா ரியாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த சீரியலுக்கு சிற்பி இசையமைக்கிறார்.
ஒருகாலத்தில் நாட்டாமை, உள்ளத்தில் அள்ளித்தா போன்ற படங்களில் பல சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் சிற்பி.