தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லிங்குசாமி இயக்கிய முதல் படம் ஆனந்தம். 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்தப்படம், ஒரு கூட்டுக் குடும்பத்தின் கதை. மம்முட்டி, முரளி, அப்பாஸ் ஆகியோர் உடன் பிறந்த சகோதரர்கள். திருப்பதி என்ற பலசரக்கு கடை நடத்துவார்கள். அந்த வீட்டுக்கு மருமகள்களாக தேவயானி, ரம்பா, வந்த பிறகு கூட்டுக் குடும்பத்தில் என்னென்ன பிரச்சினைகள் வருகிறது என்பது அந்தப் படத்தின் கதை. தற்போது இதே பாணியில் ஒளிபரப்பாக இருக்கிறது பாண்டியன் ஸ்டோர் என்ற தொடர்.
இதில் அண்ணன் தம்பிகள் 4 பேர். மூத்த அண்ணன் ஸ்டாலின். அவரது மனைவி சுஜிதா. கணவனின் தம்பிகளை பெற்ற பிள்ளைகள் போல் பாதுகாக்கிறார் அண்ணி சுஜிதா. அடுத்தடுத்த தம்பிகளுக்கு திருமணம் நடக்கிறது. புதிய மருமகள்கள் வருகிறார்கள். அவர்களால் என்னென்ன பிரச்சினை வருகிறது. அதை ஸ்டாலினும், சுஜிதாவும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தான் பாண்டியன் ஸ்டோரின் கதை.
இதனை சிவா சேகர் இயக்குகிறார். வருகிற அக்டோபர் 1ந் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ப்ரைம் டைமுக்குள் வரும்.