சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. வரும் செப்டம்பர் 30ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. கடந்த வாரத்தில் 6 போட்டியாளர்களாக இருந்தவர்களில் பாலாஜி, யாஷிகா ஆகியோர் வெளியேற்றப்பட தற்போது ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி உள்ளனர்.
இறுதிப் போட்டிக்கான டாஸ்க்குகள் இந்த வாரம் கடுமையாக இருக்கலாம். எந்த ஆண் போட்டியாளரும் இல்லாத இறுதிப் போட்டி எப்படியிருக்கும் என்பதிலும் ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. மிகவும் நியாயமாக செயல்பட்ட யாஷிகா வெளியேறிய போது பேசிய பேச்சுகள் ரசிகர்களிடம் அவருக்கென ஒரு தனி இமேஜை உருவாக்கியுள்ளது. ஐஸ்வர்யா இறுதிப் போட்டியில் இடம் பெற்றுள்ளதை ஒவ்வொரு வாரமும் வாக்களிக்கும் ரசிகர்களே விரும்பவில்லை. அதில் ஏதோ ஒரு அரசியல் இருக்கிறது என்றே பலரும் கருதுகிறார்கள். அந்த அரசியலுக்கு கமல்ஹாசனும் உடந்தையாக இருக்கிறாரோ என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது.
நிகழ்ச்சியின் 67வது நாளில் வந்து இணைந்த விஜயலட்சுமி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பதும் நியாயமானதாக இல்லை என்றே பலரும் கருதுகிறார்கள். முதல் சீசனை விட இந்த இரண்டாம் சீசனில் பல்வேறு சர்ச்சைகள், சண்டைகள் எழுந்தாலும் இறுதிக் கட்ட பரபரப்பு அதிகமாகவே உள்ளது.
வரும் ஞாயிறு அன்று நான்கு மணி நேரங்களுக்கும் மேலாக இறுதிப் போட்டி நடக்க உள்ளது. ஜனனி, ரித்விகா ஆகியோரில் இருவர்தான் பிக் பாஸ் 2 சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை மீறி வேறு ஏதாவது நடந்தால் ரசிகர்களின் சாபத்திற்கு இந்த நிகழ்ச்சி ஆளாகும் என்பதே உண்மை.