'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்னத்திரை நடிகை நிலானி சமீபகாலமாக பரபரப்பு வளையத்திற்குள் நிற்கிறார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து போலீஸ் உடையில் இவர் போலீசுக்கு எதிராக பேசியது வைரல் ஆனது. அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை ஆனார்.
சில நாட்கள் அமைதியாக இருந்த அவர் மீண்டும் வைரல் ஆனார். அவரது காதலன் காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளச்சொல்லி டார்ச்சர் செய்வதாக போலீசில் புகார் அளித்தார். இதனால் மனம் உடைந்த காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் நிலானி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பத்திரிகையாளர்களை தனது வீட்டுக்கு அழைத்த நிலானி, அங்கு பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார். தகவல் அறிந்து உடனடியாக அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நிலானி மீது 3வது வழக்காக தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யதுள்ளனர். நிலானிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.