மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கன்னட சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவரை இயக்குனர் ராமச்சந்திரன் முள்ளும் மலரும் சீரியலுக்காக தமிழுக்கு அழைத்து வந்தார். இந்த தொடரில் முனிஷ்ராஜா ஹீரோ, தேஜஸ்வினி, தர்ஷா, பாண்டி கமல், வனிதா, ஜானகி, பாலாம்பிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இதுவரை 166 எபிசோட்கள் ஒளிபரப்பாகி உள்ளது.
இந்த நிலையில் ஹீரோயின்களில் ஒருவரான தேஜஸ்வினி சீரியலில் இருந்து வெளியேறி விட்டார். அவர் தற்போது விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் பொண்ணுக்கு தங்க மனசு தொடரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
விலகல் குறித்து தேஜஸ்வினி தரப்பில் கூறப்படுவதாவது: சீரியல் தொடங்கும்போது தேஜஸ்வினிதான் ஹீரோயின். சில எபிசோட்களுக்கு பிறகு தர்ஷா உள்ளே கொண்டு வரப்பட்டார். அதன் பிறகு கதையில் தர்ஷாவுக்கு முக்கியத்தும் தரப்பட்டது. ஒரு கட்டத்தில் தர்ஷாவை ஹீரோயினாக மாற்றி, தேஜஸ்வினி கேரக்டரை மெல்ல மெல்ல வில்லியாக மாற்றினார்கள். அது பிடிக்காமல்தான் தேஜஸ்வினி வெளியேறினார் என்கிறார்கள்.