தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல சின்னத்திரை நடிகை நிலானி. போலீஸ் சீருடையில் போலீசாரை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டதன் மூலம் பரபரப்பு கிளப்பினார். இதனால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளிவந்தார். வழக்கும் நடந்து வருகிறது. தற்போது மீண்டும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நிலானி நேற்று மயிலாப்பூரில் நடந்த சின்னத்திரை தொடர் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வளசரவாக்கக்தை சேர்ந்த காந்தி லலித்குமார் என்பவர் நிலானியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. படக்குழுவினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
பின்னர் நிலானி, காந்தி லலித்குமார் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் காந்தி லலித்குமார் தன்னை ஒருதலையாக காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு வற்புறுத்தி, துன்புறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நிலானி, புகார் அளித்திருப்பதை கேள்விப்பட்ட காந்தி லலித்குமார், கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.