பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு நடிகைகள் வருவது புதிதில்லை. மார்க்கெட் இழந்து நடுத்தர வயதை தாண்டிய பிறகுதான் வருவார்கள். ஆனால் இப்போது இளம் நடிகைகளை சினிமாவிலிருது சின்னத்திரைக்கு வருவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் வந்திருக்கிறார் வித்யா. நாயகி தொடரின் நாயகியாக நடிக்கிறார்.
சைவம் படத்தின் மூலம் அறிமுகமான வித்யா, அதன் பிறகு அதிபர், பசங்க 2, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், அசுரகுலம், ஒத்தைக்கு ஒத்த படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான களரி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது தயாரிப்பில் உள்ள தடம், மாரி 2ம் பாகத்திலும் நடித்துள்ளார். கன்னடத்தில் அறிமுகமாகி சிவராஜ்குமார் ஜோடியாகவும் நடித்தார்.
வித்யா தொடர்ந்து நடித்தாலும் அவருக்கு சோலோ ஹீரோயின் வாய்ப்பு அதிகமாக அமையவில்லை எனவே சீரியலுக்கு வந்து விட்டார். ராணுவ குடும்பத்து பொண்ணு, விஞ்ஞானம் படித்து விட்டு, மாடலிங் துறைக்கு வந்து, விளம்பர படத்தில் நடித்து, சினிமாவில் நடித்து, இப்போது சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.