தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன்பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக, குமரியாக நடித்தார். சின்னத்திரைக்கு வந்தவர் இங்கும் ஏராளமான சீரியல்களில் நடித்து சீரியல் தயாரிப்பாளராகவும் ஆனார். தலையணை பூக்கள், தாமரை தொடர்களில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் வாணி ராணி சீரியலும் நிறைவடைய இருக்கிறது.
அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் அன்னக்கிளி சீரியலில் வில்லி அவதாரம் எடுக்க இருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தனது கணவர் இசையுடன் இணைந்து நிறம் மாறாத பூக்கள் தொடரை தயாரித்தவர் இப்போது விஜய் டி.விக்காக அன்னக்கிளி தொடரை தயாரிக்கிறார்.
தனது முதல் தயாரிப்பான நிறம் மாறாத பூக்களில் நடிக்காத நீலிமா ராணி, அன்னக்கிளியில் வில்லியாக நடிக்க இருக்கிறார். இதுவரை சீரியல்களில் வராத துர்கா என்ற டெரர் வில்லியாக நடிக்க இருக்கிறார். இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.