வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
தென்னிந்திய மொழிகளில் 30க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்தவர் லதாராவ். தொகுப்பாளினியாக மீடியா வாழ்க்கையை தொடங்கி சீரியல் நடிகை ஆனவர். திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரையிலிருந்து முழுமையாக விலகினார். சமீபத்தில் வெளியான கடிகார மனிதர்கள் படத்தில் கதையின் நாயகியாக நடித்தார். இனி தொடர்ந்து சினிமாவில் நடிக்கப்போவதாக லதாராவ் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி 4 மொழிகளில் நடித்தும், வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி, வெள்ளித்திரையில் முயற்சிகளை தொடர்ந்தேன். முதலில் வடிவேலுக்கு ஜோடியாக தில்லாலங்கடி என்ற படத்தில் காமெடியான கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானேன்.
அதைத் தொடர்ந்து சசிகுமார் இயக்கத்தில் ஈசன், சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி போன்று பல படங்களில் நடித்தேன். இப்பொழுது வெளியான கடிகார மனிதர்கள் என்ற படத்தில் கதையின் நாயகியாக அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பரத்தின் 8, விவேக் - தேவயானியின் எழுமின் படங்களிலும் நடித்துள்ளேன். தொடர்ந்து சினிமாவில் குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பேன் என்கிறார் லதாராவ்.