தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும், சின்னத்திரை நடிகையாகவும் வலம் வந்தவர் நிஷா. இவரது கணவர் சக்தி முருகன். இவர்கள், சென்னையில் ஸ்கை எக்யூப்மென்ட் என்ற பெயரில் மின்சாதன பொருட்களை மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்து வந்தனர்.
சென்னை, கே.கே.நகரை சேர்ந்த பிரசாந்த் என்பவரின் நிறுவனத்தில் ரூ.37 லட்சத்திற்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கியுள்ளனர். இதற்காக அனிஷா செக் கொடுத்திருக்கிறார். ஆனால் வங்கியில் பணம் இல்லை என்று சொல்லி அந்த செக் திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து நிஷாவிடம் பணத்தை கேட்டபோது தர மறுத்தாகவும், பிரசாந்த்தை அனிஷா, அவரது கணவர் சக்தி முருகன் உள்ளிட்டோர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, பிரசாந்த் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனிஷாவை கைது செய்துள்ளனர். சக்தி முருகன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அனிஷா - சக்தி முருகன் மீது டிராவல்ஸ் நடத்துவதாக கூறி மோசடி செய்ததாக புகார் உள்ளதாக கூறப்படுகிறது.