டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில், மறைந்த என்எஸ்.கிருஷ்ணனின் பேத்தியான ரம்யாவும் பங்கேற்றிருந்தார். சினிமாவில் பாடகியாக வலம் வரும் இவர், பிக்பாஸில் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் உடன் வலம் வந்தார்.
ஒருமாதம் நிகழ்ச்சியில் தாக்குபிடித்தவர், கடந்தவாரம் வெளியேற்றப்பட்டார். இது நிகழ்ச்சியை பார்க்கும் பலருக்கும் அதிருப்தியை தந்தது. ரம்யா மீது பெரியளவில் குற்றச்சாட்டுகள் இல்லை, மற்றவர்கள் போன்று புறம் பேசுவது, விதிகளை மீறுவது என எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஆனபோதும் ரசிகர்களின் ஓட்டு அடிப்படையில் இவர் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் பிக்பாஸை விட்டு வெளியேறியது மகிழ்ச்சி என ரம்யா கூறியுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது...
பிக்பாஸில் இவ்வளவு ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை, அதற்காக முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் நானாக இருக்கவே விரும்பினேன். பிக்பாஸை விட்டு வெளியேறியதை எண்ணி நிறையபேர் வருத்தப்பட்டுள்ளார்கள். உண்மையாக சொல்கிறேன், நான் வெளியேறியது மகிழ்ச்சி தான். இதற்கு மேல் என்னால் அந்த வீட்டில் இருக்க முடியாது. அங்கு ஒரே சண்டை, போட்டி, புறம்பேசுவது என தொடர்கிறது. நீங்கள் பார்ப்பது ஒரு மணிநேரம் தான், ஆனால் 24 மணிநேரமும் நாங்கள் அனுபவித்து வந்தோம். நான் வெளியேறியதை எண்ணி நீங்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
இவ்வாறு ரம்யா கூறியுள்ளார்.