'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர், நடிகைகள் தற்கொலை சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. தற்போது டிவி சீரியல்களில் நடித்து வந்த ப்ரியங்கா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ரம்யா கிருஷ்ணன் தயாரித்த வம்சம் சீரியலில் நடித்து பிரபலமானவர் ப்ரியங்கா. சில சீரியல்களில் நடித்து வந்த இவர், சென்னை, வளசரவாக்கம், காமக்கோடி நகரில் வசித்து வந்தார். இவருக்கும் கூடைப்பந்து பயிற்சியாளருமான அருண்பாலா என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இருவருக்கும் குழந்தை இல்லாத நிலையில், இதை காரணம் காட்டி அடிக்கடி குடும்பத்தில் சண்டை வந்துள்ளது. இதனால் சில மாதங்களாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை ப்ரியங்காவின் அறைக்கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து வீட்டு வேலைக்கார பெண் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது ப்ரியங்கா, தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குடும்ப பிரச்னை காரணமாக ப்ரியங்கா தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.