தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நந்தினி தொடரில் வில்லனாக நடித்தவர் கிரண் ஆர்யா. தற்போது சினிமாவில் வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ஒரு குப்பை கதை படத்தில் வில்லனாக நடித்தவர், அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் ஹிப் ஆப் தமிழா ஆதி, இயக்கி, நடிக்கும் படத்திலும் வில்லனாக நடிக்கிறார். மேலும் இரண்டு படங்களில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
எனக்கு சொந்த ஊர் பெங்களூர். சிறு வயதாக இருக்கும் போதே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஏன் என்றால் என் சித்தப்பா ஒரு இயக்குனர். அப்போதிலிருந்தே சினிமா மீது காதல். கல்லூரி படிப்பை முடித்து சொந்தமாக ஒரு தொழில் துவங்கி வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது என் நண்பர் குறும்படத்தில் நடிக்க வைத்தார் அப்போதிருந்து என் சினிமா வாழ்க்கை ஆரம்பமாகி விட்டது.
பிறகு தகடு என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானேன். பிறகு பாலுமகேந்திராவின் கூத்துப் பட்டறையில் நடிப்பு பயின்று வந்தேன். அப்போது அங்கு பார்த்த இயக்குனர் காளி ரங்கசாமி, என்னை ஒரு குப்பைக் கதை படத்தில் வில்லன் காதபாத்திரத்தில் நடிக்க வைத்தார். படத்தில் என்னை நம்பி பெரிய கதாபாத்திரம் கொடுத்தார். அதன்பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நந்தினி தொடர் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து சீரியல்களில் நடித்துக் கொண்டே சினிமாவிலும் வில்லனாக நடிப்பேன். ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதே லட்சியம் என்கிறார் கிரண் ஆர்யா.