ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவாக சின்னத்திரை நடிகைகள் பாலியல் தொழில் வழக்கு, பணமோசடி வழக்கில் சிக்கி கைதாகியிருக்கிறார்கள். முதன் முறையாக மலையாள முன்னணி டி.வி நடிகை சூர்யா சசிகுமார், கள்ள நோட்டு அச்சடித்ததாக தனது தாய் மற்றும் சகோதரியுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுபற்றிய விபரம் வருமாறு:
கேரளாவில் இடுக்கி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த வாகன சோதனையில் சந்தேகத்துக்கிடமான சிலர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 2 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது. அவர்களிடம் போலீசார் தங்கள் ஸ்டைலில் நடத்திய விசாரணையில் பல தகவல்களை சொன்னார்கள். அவர்கள் கொடுத்து தகவலின்படி போலீசார் கொல்லம் சென்று விசாரித்தனர்.
அங்கு முளங்காடம் பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் கள்ள நோட்டு அச்சடிக்கப்படும் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை போலீசார் அந்த பங்களாவுக்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கள்ள நோட்டு அச்சடிக்கப் பயன்படும் எந்திரம் மற்றும் 57 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை கைப்பற்றினர். அத்துடன் கள்ள நோட்டுகளை அச்சடித்ததாக சின்னத்திரை நடிகை சூர்யா சசிகுமார், அவரது தாயார் ரமாதேவி, சகோதரி ஸ்ருதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மலையாள சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைது செய்யப்பட்ட சூர்யா சசிகுமார் மலையாள முன்னணி சேனல்களில் ஒளிபரப்பான பரிணயம், மாலஹமர், ஹிருயம் ஷாக்சி, ஆயிரத்தில் ஒருவள் உள்பட பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது சில சீரியல்களில் நடித்தும் வருகிறார்.