ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. இதற்கான அமைக்கப்பட்ட பிரமாண்ட வீட்டில் 60 கேமராக்கள் கொண்டு இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் வெளி மாநிலம், மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பெப்சி தொழிலாளர்கள் சுமார் 25 பேர் பெப்சி நிர்வாகி அங்கமுத்து சண்முகம் தலைமையில் பிக்பாஸ் வீட்டை முற்றுகையிட்டனர். வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு பணியாற்றக்கூடாது பெப்சி தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று அங்குள்ள நிர்வாகிகளிடம் தெரிவித்தனார். இதனால் நேற்று நடந்த படப்பிடிப்பு சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் பெப்சி தொழிலாளர்கள் நிகழ்ச்சி மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்து விட்டுச் சென்றனர்.
இதுகுறித்து பெப்சி நிர்வாகி அங்கமுத்து சண்முகம் கூறும்போது, "தமிழ்நாட்டில் நடக்கும் படப்பிடிப்பில் வெளிமாநில தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்துவது பெப்சி விதிகளுக்கு முரணானது. அதிக அளவில் பெப்சி தொழிலாளர்களைத்தான் பயன்படுத்த வேண்டும். கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். இதுகுறித்து கமல்ஹாசனிடம் தெரிவிப்போம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் தற்போது பணிபுரிந்து வரும் பெப்சி தொழிலாளர்கள் அனைவரையும் திரும்ப பெறுவோம்" என்றார்.