தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தூத்துக்குடியில் நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசாரை கடுமையாக விமர்சித்து போலீஸ் உடையிலேயே சின்னத்திரை நடிகை நிலானி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக வடபழனி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
குன்னூரில் நேற்று முன்தினம் நிலானியை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்னதாக அவரிடம் வடபழனி காவல் நிலையத்தில் 4 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. அவர் வாக்குமூலத்தில் நிலானி தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
எனக்கு சொந்த ஊர் தஞ்சை. சிறு வயதில் இருந்தே சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்று ஆசை இருந்தது. இதற்காகவே சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினேன். ஆனால் தொலைக்காட்சி தொடர்களில் தான் வாய்ப்பு கிடைத்தது. அதை வைத்து ஜல்லிக்கட்டு போராட்டம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் என சமூக பிரச்னைக்கான போராட்டங்களில் தமிழ் இயக்கங்களுடன் சேர்ந்து போராடினேன். கடைசியாக ஈழத்தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஆனாலும் என்னை பற்றி பெரிய அளவில் பொதுமக்கள் பேசவில்லை.
இதனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த நேரத்தில் சின்னத்திரை படப்பிடிப்பில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் போது போலீஸ் சீருடையிலேயே பேசிய வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டேன். என்னை பற்றி மக்கள் பரவலாக பேச வேண்டும் என்பதற்காகத்தான் வீடியோவை பதிவு செய்தேன். மேலும், பட வாய்ப்புக்கான விளம்பரமாக இது அமையும் என்று நினைத்தேன். காவல் துறை பற்றி தவறாக பேசும் எண்ணம் எனக்கு இல்லை, என்று அவர் வாக்குமூலம் அளித்திருப்பதாக தெரிகிறது.