தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மே 26 அன்று மிகப் பிரம்மாண்டமாக விழா நடைபெற இருந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி, துாத்துக்குடி சம்பவம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்று இருந்த டிக்கெட் கட்டணத்தை திருப்பி தர உள்ளதாக விஜய் டி.வி., நிர்வாக தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வந்த விஜய் அவார்ட்ஸ் என்ற விருது விழா, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. தமிழ்த்திரைப்படங்களின் சாட்டிலைட் ரைட்ஸை விஜய் டிவி வாங்காமல் இருந்ததால், விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு தடை விதித்தது தயாரிப்பாளர் சங்கம்.
அதன்பிறகு தமிழ்ப்படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்க முன் வந்தது விஜய் டிவி. ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெறாமலே இருந்தது.
இந்நிலையில், 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, 10-வது வருடமாக இந்த ஆண்டு விஜய் அவார்ட்ஸ் விருது விழா நடைபெற இருக்கிறது. இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், அனுராக் காஷ்யப், யூகி சேது மற்றும் நடிகை ராதா ஆகியோர் நடுவர்களாக இருந்து இந்த வருடத்துக்கான விஜய் அவார்ட்ஸ் விருது பெறும் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்நிலையில், துாத்துக்குடி சம்பவம் காரணமாக, விஜய் அவார்ட்ஸ் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.