விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
ராஜா ராணி தொடரில் வில்லியாக நடித்து வருகிறவர் ஸ்ரீதேவி. இவரது வில்லத்தனத்துக்கே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீதேவி, தனது மாநிலத்தைச் சேர்ந்த போட்டோகிராபரை சத்தமே இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.
அவர் பெயர் அசோக் சிந்தாலா. பெங்களூரில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறார். என்றாலும் செல்லப் பிராணிகளை படம்பிடிப்பதில் நிபுணர். இவரைப் பற்றி பேஸ்புக்கில் அறிந்து கொண்ட ஸ்ரீதேவி, தனது வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளை படம் எடுக்க அழைத்துள்ளார். அவரும் வந்துள்ளார். இந்த சந்திப்பு காதலாக மலர சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. காதல் திருமணம் என்றாலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் ஆந்திர பாரம்பரியப்படி திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார் ஸ்ரீதேவி.