பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ராஜா ராணி தொடரில் வில்லியாக நடித்து வருகிறவர் ஸ்ரீதேவி. இவரது வில்லத்தனத்துக்கே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீதேவி, தனது மாநிலத்தைச் சேர்ந்த போட்டோகிராபரை சத்தமே இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.
அவர் பெயர் அசோக் சிந்தாலா. பெங்களூரில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறார். என்றாலும் செல்லப் பிராணிகளை படம்பிடிப்பதில் நிபுணர். இவரைப் பற்றி பேஸ்புக்கில் அறிந்து கொண்ட ஸ்ரீதேவி, தனது வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளை படம் எடுக்க அழைத்துள்ளார். அவரும் வந்துள்ளார். இந்த சந்திப்பு காதலாக மலர சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. காதல் திருமணம் என்றாலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் ஆந்திர பாரம்பரியப்படி திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார் ஸ்ரீதேவி.