பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜீ தமிழ் சேனல் நடத்திய சரிகமப நிகழ்ச்சியல் தொடக்கம் முதல் நட்சத்திர பாடகியாக இருந்தவர் ரமணியம்மாள். 60 வயதை கடந்த ரமணியம்மாள் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தவர். அவரை தேடி கண்டுபிடித்து மேடையேற்றியது ஜீ தமிழ். ரமணியம்மாள் பாட்டுக்கு தனி ரசிகர்களே உருவானார்கள். அவர் பாடத் தொடங்கினால் கைதட்டல் காதை பிளக்கும். சேனல்காரர்களும் அவரை வெளிநாட்டுக்கெல்லாம் அழைத்துச் சென்று தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
ரமணியம்மாள் இறுதி சுற்றுவரை வந்தார். டைட்டில் வின்னர் அவர்தான் என்று நிகழ்ச்சியை பார்த்த ஒவ்வொருவரும் கணித்தார்கள். ஆனால் போட்டியின் முடிவில் கேரளாவைச் சேர்ந்த வர்ஷா டைட்டில் வென்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 40 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. 60 வயதுக்கு மேல் நமக்கு இந்த அளவிற்கான புகழும், பணமும் கிடைத்ததே பெரிது என்று ரமணியம்மாள் கருதினாலும் அவரது ரசிர்கள் பட்டாளம் விடுவதாக இல்லை.
"நடுவர்களின் மதிப்பெண்கள், நிகழ்ச்சியின்போது நேயர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையிலே டைட்டில் வின்னர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் நேயர்களின் அதிக வாக்குகளை பெற்றவர் ரமணியம்மாள் தான். அதுவரை ரமணியம்மாளுக்கு மதிப்பெண்களை அள்ளிப்போட்ட நடுவர்கள் இறுதிபோட்டியில் அவருக்கு மதிப்பெண்களை ஏன் குறைக்க வேண்டும். நிஜமாகவே வெற்றி பெற்றது ரமணியம்மாள் தான்" என்று நெட்டிசன்கள் கருத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
"வர்ஷா முறைப்படி சங்கீதம் படித்த புரபசனல் பாடகி. ஆனால் ரமணியம்மாள் எந்த சங்கீத பின்புலமும் இல்லாத சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். அவரது குடும்ப சூழல், வாழ்க்கை சூழல், வயது இவற்றையும் நடுவர்கள் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்" என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பிரச்னைக்கு சேனல் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.